கே.ஆரின் புதிய முயற்சிக்கு கமலஹாசன் ஆதரவு! ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்துக்கு “ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் ப்ரீ”!

கே.ஆரின் புதிய முயற்சிக்கு கமலஹாசன் ஆதரவு!  ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்துக்கு “ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் ப்ரீ”!

 

பிரபல படத்தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் இயக்குனருமான கே ஆர் வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார். இதில் விதார்த் சரவணன் ஜார்ஜ் அருந்ததி நாயர் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. சிறு பட்ஜெட் படங்கள் சந்திக்கும் இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறறார் கே ஆர்.
அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் “ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இந்த திட்டம் ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி.

தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் காட்டும் உலக நாயகன் கமலஹாசன் கே. ஆரின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

அதில்,

“சிறப்பான முயற்சி… தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *