விழாக்கோலம் பூண்ட கங்கைகொண்ட சோழபுரம்: சோழப் பேரரசர்களுக்கு பிரமாண்ட சிலை!  கடல் பாதுகாப்பு திட்டத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர்!! தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடி!!!

விழாக்கோலம் பூண்ட கங்கைகொண்ட சோழபுரம்: சோழப் பேரரசர்களுக்கு பிரமாண்ட சிலை!   கடல் பாதுகாப்பு திட்டத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர்!!  தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் மோடி!!!

 

தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமான கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு சிறப்பித்தார். அத்துடன் பேரரசர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். முன்னதாக விருதுநகர் கொண்டு வந்திருந்த கங்கை நீரால் பிரகதீஸ்வரர் அவசியம் செய்யப்பட்டது மோடி தன் கையால் ஆரத்தி காட்டினார்.‌‌ மனமுருக சிவபெருமானை பியார் செய்தார். அவருக்கு கோவில் சார்பாக சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்த பிரதமர் எழுந்து நின்று கைதட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் மக்களையும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் விமான பயணம் என்பது உடலை கடுமையாக வருத்தக் கூடியது. புவிஈர்ப்பு விசையினை மீறி நடக்கும் அந்த இயக்கம் கடும் உளைச்சலில், அசதியில், உடலை கொண்டு தள்ளும்.

அதனால்தான் ஒரு விமான பயணம் முடிந்தபின் பைலட்டுகளுக்கே ஓய்வு வழங்கப்படும். இன்னும் பல கட்டுப்பாடுகள் உண்டு.

ஆனால் நம் பிரதமர் மோடி அவர்கள் 74 வயதில் எப்படி,

இப்படி ஓயாமல் பறக்க முடிகின்றது?

ஓய்வு என்பதே அறியாமல் ஓடி, ஓடி உழைக்க முடிகின்றது? என்றால் அதில்தான் இந்த மண்ணின் மேலும், மக்கள் மேலும் அவர் கொண்ட பெரும் அன்பு புரிகின்றது. தன் நாடும், தன் நாட்டு மக்களும் தவிர எதையுமே அம் மாமனிதர் சிந்திப்பது இல்லை என்பது தெரிகின்றது.

இங்கிருந்து லண்டனுக்கு பலமணிநேர பயணம்.

பின் மாலத்தீவு. அங்கிருந்து தூத்துக்குடி. என தொடர்ந்து களைப்பே இன்றி பயணிப்பது மானுடர்க்கு சாத்யமில்லை. அம்மனிதரிடம் ஏதோ விஷேசித்த சக்தி குடி கொண்டிருக்கின்றது.

அந்த அற்புத திருமகன், கற்பகத் தருவாய் தமிழகத்துக்கு பல நலத் திட்டங்களை தூத்துக்குடியில் அறிவித்திருக்கின்றார். தூத்துக்குடியின் பாரம்பரிய பெருமைகளை சொல்லி, பில்கேட்ஸ்க்கு தான் கொடுத்த தூத்துக்குடி முத்து பற்றி சொல்லி,

இந்நாட்டின் மிக முக்கியமான, பாரம்பரியமான இடம் இந்த தூத்துக்குடி கடல் என்பதை உலகறிய சொல்கின்றார்.

அப்படியே அந்த மண்ணின் மாவீரர்களை, சுதந்திர போராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து, 4,100 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கின்றார்.

அதன்பின் இப்போது நம் மாபெரும் ஹிந்து மன்னன், சிவபக்தன் ராஜேந்திர சோழனின் பெருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.

இது மிக முக்கியமான நேரம். ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியினை பாடியபடி, ஒவ்வொருவரும் திருநீறும், ருத்ராட்சமும், வெண்ணாடையுமாக, அவனை மோடியுடன், நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம்.

ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் அங்கீகாரத்தை உலகவாழ் ஹிந்துக்களிடமிருந்து, தேசத்தின் மொத்த மக்களுக்கும் பெற்று தருகின்றார் மோடி.

அவரின் மாபெரும் சிவபக்திக்கு பெரும் சான்றாக, அவர் கொண்டிருந்த பெரும் சிவபக்திக்கு, அங்கீகாரமாக, ஒவ்வொரு ஹிந்துவிடமும், அவனை கொண்டு செல்கின்றார்.

ஹிந்து மன்னர்கள் என்றால் விக்ரமாதித்யன், சந்திர குப்தன், சத்ரபதி சிவாஜி என சொல்லிக் கொடுத்து பிரிக்கப்பட்ட வடநாட்டு ஹிந்துக்களிடம் இவன் நம் ஹிந்து மன்னன். நம்மில் ஒருவன். நம் சிவனை வணங்கியவன். என எடுத்து செல்கின்றார்.

அப்படியே தமிழன், தமிழ் பெருவீரன், தமிழரின் அடையாளம் என பிரித்து திணிக்கப்பட்ட அவன் அடையாளத்தை, தேசிய அடையாளமாக ,பாரத மன்னர் களில் ஒருவன், பாரத சிவபக்த மன்னர்களில் ஒருவன் என அவனை தேசியத்துக்குள் சரியாக பொருத்துகின்றார்.

இன்னொரு விஷயம் முக்யமானது. அது உலக அரசியல்.

மேற்கே அரபிக்கடல் பக்கம் அந்நிய சதியையெல்லாம் இந்தியா முடக்கியிருக்கின்றது. ஈரான் முதல் இந்தியாவின் பம்பாய், கோவா, லட்சத்தீவு, மாலத்தீவு அது தொடங்கி ஆப்ரிக்கா என எல்லா பக்கமும், இந்திய கப்பல் தளமும், பாதுகாப்புகளும் சரியாக பின்னப் பட்டிருக்கின்றன‌.

இந்த மேற்கத்திய கடல் காவலுக்கு வீரசிவாஜி பெயரில் கப்பல்படை நகர்வுகள் செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் இன்று இந்திய கடல் முற்றுகைக்குள் தான் இருக்கின்றது.

அதுபோக மிகப்பெரிய எதிரியான சீனாவின் முத்துமாலை திட்டம் என இந்தியாவினை சுற்றி, அது கட்டிய கடல் சதி வலையின் மேற்கு பக்கம், வெட்டியாயிற்று.

ஆனால் கிழக்கே நிலமை இன்னும் சரியாக வில்லை. வங்கதேசம், பர்மா, தாய்லாந்தின் சில பக்கம் என சீனாவின் மிரட்டல் அதிகம்.

இதனால் கிழக்கு கடற்கரையில் கவனம் செலுத்துகின்றது நம் மோடி அரசு.மிக பிரமாண்ட மான காரியங் களை அது செய்கின்றது.

சுமார் 50 கப்பல்கள், கணக்கற்ற நீர்மூழ்கிகள், பிரத்யோக கடல் கலன்கள் என கிழக்கு கடலை கட்டுப்படுத்தும் இந்தியாவின் திட்டம் மிகப் பெரியது.

அந்தமான் வழியாக வரும் சீன மிரட்டல், தாய்லாந்தை ஊடறுத்து அது கட்ட நினைக்கும் கால்வாய், பர்மா, வங்கதேசம் வழியாக அது இடும் மிரட்டலை எல்லாம் வெட்டிப்போட மாபெரும் கடல் பாதுகாப்பை கட்டுகின்றது மோடி அரசு.

இந்த பிரமாண்ட கடல் திட்டத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை இடும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டு!!

ராஜேந்திர சோழனை இத்தேசம் தமிழனாக மட்டும் பார்க்க வில்லை. அவன் தமிழ் பேசிய ஹிந்து. இந்நாட்டின் மாபெரும் அடையாளம். இத்தேசத்தின் கவுரவம். இத்தேசத்தின் மிக முக்கிய பாரம்பரியம் என்றே கருதுகின்றது.

அதனால் எந்த கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவிலில் வழிபட்டு கிழக்காசியா முழுக்க ராஜேந்திர சோழன் கட்டுப்படுத்தினானோ, அதே வழியில், அதே சிவனை வணங்கி, அவன் பெயரில் மாபெரும் திட்டத்தை, முன்னெடுக்கின்றார் நமது பிரதமர் மோடி.

அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனிடம், தேசத்துக்காக, கேட்கும் வரத்தை, நாமும் கேட்போம்!

சோழம், சோழம் என முழங்கிய அந்த கோவில் முன், நாமும் தேசம்.. தேசம்.. என முழங்கி இந்நாட்டுக் கான வரத்தை கேட்போம். தென்னாட்டை தன்நாடாகக் கொண்ட அந்த சிவன் இத்தேசத்துக்கு எல்லா காவலையும், பெரும் வரத்தையும், அருளையும் அருளட்டும்!

எக்காலமும் இங்கு மதமும், மண்ணும், காக்கும் பெரும் வரத்தை, ராஜேந்திர சோழனுக்கு கொடுத்தது போல, பிரதமர் மோடிக்கும் அந்த பெரும் வரத்தை சிவன் வழங்கட்டும்.

நம்மில் ஒருவரான இவரது தலைமையின் கீழ் நம் நாடு பாதுகாப்பாக இருக்கட்டும்.

இவரது வழிகாட்டலில் உலகில் சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்.

அதற்காக எல்லாம் வல்ல ஈஸ்வரன் அவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வழங்க ப்ரார்த்தனை செய்வோம்..

ஜெய் ஹிந்த்.

Loading

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *